10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படை விரைவு


10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படை விரைவு
x
தினத்தந்தி 8 Dec 2022 12:19 PM GMT (Updated: 8 Dec 2022 12:46 PM GMT)

பேரிடர் மீட்புப் படையினர் 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

சென்னை,

மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கிற்கு சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைக் கொண்டுள்ளது.

இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பேரிடர் மீட்புப்படையினர் 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.


Next Story