திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 11 April 2023 6:45 PM GMT (Updated: 11 April 2023 6:46 PM GMT)

நாகூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூரில் திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 2-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 7-ந் தேதி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதை தொடர்ந்து தீமிதி திருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றம் நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story