திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 16 Aug 2023 6:45 PM GMT (Updated: 16 Aug 2023 6:46 PM GMT)

வாய்மேடு அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story