ஜேடர்பாளையம் அருகே ராஜா வாய்க்கால் மதகில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி


ஜேடர்பாளையம் அருகே  ராஜா வாய்க்கால் மதகில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
x

ஜேடர்பாளையம் அருகே ராஜா வாய்க்கால் மதகில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே ராஜா வாய்க்கால் மதகில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

ராஜா வாய்க்கால்

பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ராஜா வாய்க்கால் மதகின் கீழ் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் ஜேடர்பாளையம் அருகே உள்ள தண்ணீர்பந்தல் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த தொழிலாளியான அண்ணாதுரை (வயது 52) என்பது தெரியவந்தது.

விசாரணை

இவர் சம்பவத்தன்று ஆனங்கூர் ராஜா வாய்க்கால் அருகே தண்ணீர் திறந்து விடும் மதகின் மேல் அமர்ந்து மது குடித்தார். அப்போது அவர் போதையில் மதகில் இருந்து தவறி கீழே விழுந்து ‌‌‌இறந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story