திருச்செந்தூர் கடற்கரையில் 5 சவரன் தங்க செயினை தவறவிட்ட பக்தர் - தேடி கண்டுபிடித்த கடல் பாதுகாப்பு குழுவினர்


திருச்செந்தூர் கடற்கரையில் 5 சவரன் தங்க செயினை தவறவிட்ட பக்தர் - தேடி கண்டுபிடித்த கடல் பாதுகாப்பு குழுவினர்
x

திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடும்போது பெண் ஒருவர் தவறவிட்ட 5 சவரன் தங்க செயினை கடல் பாதுகாப்பு குழுவினர் தேடி தந்தனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் புனித நீராடும்போது பெண் ஒருவர் தனது 5 சவரன் தங்க செயினை தவறவிட்டார். இது தொடர்பாக அந்த பெண் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு குழுவினரை வரவழைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

50-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து தேடிய நிலையில், கடல் பாதுகாப்பு பணியாளர் வேலுச்சாமி என்பவர் அந்த செயினை கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த பெண்ணிடம் தங்க செயினை திருப்பி கொடுத்தனர். தங்க செயினை கண்டுபிடித்து கொடுத்த குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.



Next Story