வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்திட இன்று முதல் கோரிக்கை பெட்டி


வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்திட இன்று முதல் கோரிக்கை பெட்டி
x
தினத்தந்தி 2 Jun 2023 7:39 PM GMT (Updated: 3 Jun 2023 5:39 AM GMT)

வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்திட இன்று முதல் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்திட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்ததின் தொடர்ச்சியாக திருச்சி வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து மனுக்களானது வரவேற்கப்பட்டு, இன்று (சனிக்கிழமை) முதல் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட இருக்கின்றன. அது சமயம் அலுவலக வேலை நாட்களில் வீட்டு வசதி தொடர்பான மனுக்களை பொதுமக்கள் மனு செய்து அரசிடமிருந்து தீர்வுகள் பெற்று கொள்ளலாம். எனவே மக்களின் குறைதீர்க்க முதல்-அமைச்சரின் முன்னெடுப்பு திட்டம் மூலம் மனு செய்து பயன்பெறுமாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருச்சி வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளரும், நிர்வாக அலுவலருமான கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


Next Story