கார் மோதி வடமாநில வாலிபர் சாவு


கார் மோதி வடமாநில வாலிபர் சாவு
x
தினத்தந்தி 21 Oct 2023 7:30 PM GMT (Updated: 21 Oct 2023 7:31 PM GMT)

சூளகிரி அருகே கார் மோதி வடமாநில வாலிபர் பலியானார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

திரிபுரா மாநிலம் அலகாபூர் பகுதியை சேர்ந்தவர் அனுப்குமார் ஆஷாஜி (வயது 33). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொல்லப்பள்ளியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அவர் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அனுப்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அனுப்குமார் இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story