கார் மோதி தொழிலாளி பலி


கார் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 17 Oct 2023 7:30 PM GMT (Updated: 17 Oct 2023 7:31 PM GMT)

ஓசூரில் கார் மோதியதில் தொழிலாளி பலியானார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் சிப்காட் பேகேப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 64). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 15-ந் தேதி இரவு ஓசூர் - பெங்களூரு சாலையில் மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் வெங்கட்ராமன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story