மின்னல் தாக்கி மாடு பலி


மின்னல் தாக்கி மாடு பலி
x
தினத்தந்தி 16 Oct 2023 7:30 PM GMT (Updated: 16 Oct 2023 7:30 PM GMT)

மின்னல் தாக்கி மாடு பலியானது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போதக்காடு மாரியம்மன் கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் மாது (வயது 45). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தோட்டத்தில் மாடுகளை கட்டி வைத்து இருந்தார். இரவு அந்த பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கி மாடு செத்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story