தீவட்டிப்பட்டியில்காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து சாவுசாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்


தீவட்டிப்பட்டியில்காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து சாவுசாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
x

தீவட்டிப்பட்டியில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சேலம்

ஓமலூர்

காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

காதல் திருமணம்

தீவட்டிப்பட்டி வண்ணாங்குட்டை பாறையை சேர்ந்த கூலி தொழிலாளி மணி (வயது 24), இவர், ஓமலூர் மக்கான்தெருவை சேர்ந்த கவுரி (23) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 1½ வயதில் தேவசேனா என்ற பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று கவுரி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

சாவில் சந்தேகம்

இதற்கிடையே கவுரியின் தாய் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், என்னுடைய மகளிடம் வரதட்சணை கேட்டு மணி மற்றும் குடும்பத்தினர் தொந்தரவு கொடுத்துள்ளனர். எனவே என்னுடைய மகள் சாவில் சந்தேகம் உள்ளது.

கவுரி சாவு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே கவுரிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆவதால் உதவி கலெக்டர் தணிகாசலம் விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story