சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி


சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 12 Oct 2023 7:30 PM GMT (Updated: 12 Oct 2023 7:30 PM GMT)

சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் தாலுகா கந்திகுப்பத்தை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் சைக்கிளில் பர்கூர் அருகே ஒரப்பம் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த சரக்கு வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் சகாயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சகாயராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்


Related Tags :
Next Story