மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 12 Oct 2023 7:30 PM GMT (Updated: 12 Oct 2023 7:30 PM GMT)

தளி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 பேர் பலியானார்கள்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 பேர் பலியானார்கள்.

கட்டிட தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள தேவகானபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அசோக். இவருடைய மகன் யோகி கிருஷ்ணா (வயது 22). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது அவருடைய மனைவி 8 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று யோகி கிருஷ்ணா மற்றும் அதே ஊரை சேர்ந்த நரசிம்மையா 50 ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மதகொண்டப்பள்ளியில் இருந்து தேவகானபள்ளி கிராமத்துக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை யோகி கிருஷ்ணா ஓட்டினார். நரசிம்மையா பின்னால் அமர்ந்து சென்றார்.

2 பேர் பலி

அப்போது தேவகானபள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு யோகி கிருஷ்ணா, நரசிம்மையா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் யோகி கிருஷ்ணா இறந்தார். நரசிம்மையா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story