ஓசூர் அருகேஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி


ஓசூர் அருகேஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 10 Oct 2023 7:30 PM GMT (Updated: 10 Oct 2023 7:30 PM GMT)

ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி:

ஓசூர் தாலுகா கொத்தகொண்டப்பள்ளி அருகே உள்ள பொம்மண்டப்பள்ளியை சேர்ந்தவர் கோபால் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் பொம்மண்டப்பள்ளி ஏரியில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிய கோபால் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story