காரிமங்கலம் அருகேகிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு


காரிமங்கலம் அருகேகிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
x
தினத்தந்தி 5 Oct 2023 7:30 PM GMT (Updated: 5 Oct 2023 7:30 PM GMT)

காரிமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் மரணமடைந்தார்.

தர்மபுரி

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தெல்லனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 75). இவர் நேற்று கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்குள்ள 45 அடி ஆழ கிணற்றில் அவர் தவறி விழுந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயனணப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அதற்குள் முதியவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இதையடுத்து அவர்கள், முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story