குளத்தில் செத்து மிதந்த மீன்கள்


குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
x

குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன.

புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் தண்ணீர் நிறைந்திருப்பதால் பொதுமக்கள் அதிகம் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் குளத்தில் மீன்களும் ஏராளம் இருந்தது. இந்த நிலையில் நேற்று ஏராளமான சின்ன மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பருவநிலை மாற்றத்தால் சிறிய மீன்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு சிறிய மீன்கள் செத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story