கழிவுநீர் வடிகாலில் ரத்தக்காயங்களுடன் முதியவர் பிணம்


கழிவுநீர் வடிகாலில் ரத்தக்காயங்களுடன் முதியவர் பிணம்
x

கும்பகோணத்தில் கழிவுநீர் வடிகாலில் ரத்தக்காயங்களுடன் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணத்தில் கழிவுநீர் வடிகாலில் ரத்தக்காயங்களுடன் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதியவர் பிணம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேற்கு போலீஸ் சரக்கத்துக்கு உட்பட்ட பகுதியான கும்பகோணம் வருமானவரித்துறை அலுவலகம் எதிரே உள்ள கழிவு நீர் வடிகாலில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தலையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கும்பகோணம் மேற்கு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கழிவுநீர் வடிகாலில் கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

இறந்து கிடந்த முதியவரின் வலது கையில் உதயசூரியன் படம் பச்சை குத்தியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தலையில் இருந்த காயத்துக்கு காரணம் என்ன? கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கழிவுநீர் வடிகாலில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story