தீயில் எரிந்து பட்டாசுகள் நாசம்


தீயில் எரிந்து பட்டாசுகள் நாசம்
x

தாயில்பட்டி அருகே தீயில் எரிந்து பட்டாசுகள் நாசமானது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள கோட்டைப்பட்டி செல்லும் ரோட்டில் விஜயகரிசல் குளத்தை சேர்ந்த முத்துவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. பட்டாசு கடை அருகே தகர செட் அமைக்க வெல்டிங் எந்திரங்கள் மூலம் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட தீப்பொறி பட்டாசு கடைக்குள் இருந்த பட்டாசில் பட்டதும் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் கடைக்குள் இருந்த பட்டாசுகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story