சென்னையில் பேருந்துகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு மையம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


சென்னையில் பேருந்துகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு மையம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x

சென்னை பல்லவன் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

நிர்பயா பாதுகாப்பு திட்டத்தின்கீழ் சென்னையில் 500 மாநகர பேருந்துகளில் முதற்கட்டமாக சி.சி.டி.வி. கேமரா, செயற்கை நுண்ணறிவு வீடியோ ரெக்கார்டருடன் கூடிய கருவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இதனை ஒருங்கிணைக்கும் வகையில் சென்னை பல்லவன் இல்லத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டை மையத்தை தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.


Next Story