வேம்படி மகாமாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி


வேம்படி மகாமாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி
x

வேம்படி மகாமாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி

திருவாரூர்

வலங்கைமான் செட்டி தெருவில் உள்ள வேம்படி மகாமாரியம்மன் கோவிலில் செடில் திருவிழா கடந்த 3-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. 5-ந்தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் இரண்டாம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை அன்ன வாகனத்தில் வேம்படி மகாமாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 19-ந்தேதி செடில் திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story