கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கன்னியாகுமரியில் குவிந்த  சுற்றுலா பயணிகள்
x

வார விடுமுறையையொட்டி நேற்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் தெளிவாக தெரியாததால் ஏமாற்றமடைந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

வார விடுமுறையையொட்டி நேற்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் தெளிவாக தெரியாததால் ஏமாற்றமடைந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஏமாற்றத்துடன் திரும்பினர்

அதைத்தொடர்ந்து அவர்கள் அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண திரண்டிருந்தனர். அப்போது, சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர், படகில் உற்சாகத்துடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.

தீவிர கண்காணிப்பு

இதேபோல், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story