இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 Nov 2022 6:45 PM GMT (Updated: 2 Nov 2022 6:46 PM GMT)

குத்தாலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் ஒன்றியம் சேத்திரபாலபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கொடிக்கம்பத்தை பிடுங்கி கொடியை எரித்து சிலர் சேதப்படுத்தினர். இதுகுறித்து குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்களை போலீசார் கைது செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் குத்தாலம் போலீஸ் நிலையம் எதிரே கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போராட்டக்காரர்களுடன் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story