மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 25-ந்தேதி ஆர்ப்பாட்டம் - முத்தரசன் அறிவிப்பு


மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 25-ந்தேதி ஆர்ப்பாட்டம் - முத்தரசன் அறிவிப்பு
x

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை சிம்மக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மணிப்பூர் வன்முறை குறித்து பேசிய அவர், மணிப்பூர் இந்தியாவில் தான் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், மத்திய அரசு இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் இத்தகைய பெரிய சம்பவங்கள் நடந்திருக்காது என்றும் தெரிவித்தார்.

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்த அவர், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து வரும் 25-ந்தேதி நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.



Next Story