நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்  இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரேயா சிங், இந்திய அரசியலமைப்பு உறுதிமொழியான "இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும், சமநல சமுதாயமும், சமயச்சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவ இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கி கொள்கிறோம்" என வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, கவுசல்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story