தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம்


தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம்
x

தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

கரூர்

திருக்காடுதுறை பகுதியில் தென்னை மரங்கள் அதிகளவு உள்ளது. இந்தநிைலயில் தென்னை மரங்களை மின் கம்பிகள் உரசியதால் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் அணைக்க முடியவில்லை. இது குறித்து அப்பகுதி சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரங்களில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் சில தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.


Related Tags :
Next Story