தூய்மை பணி


தூய்மை பணி
x

தூய்மை பணி

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி நடந்தது. அப்போது பஸ் நிலையம், பள்ளிகளின் சுற்று வட்டார பகுதிகள், குடிநீர் தொட்டிகள் உள்ள பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு, அங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. தலைஞாயிறு பேரூராட்சி தூய்மை பணி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன், இளநிலை உதவியாளர் குமார், தூய்மைபணி மேஸ்திரி அகிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story