தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமின் மனு


தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமின் மனு
x

திமுக-விலிருந்து நீக்கப்பட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது., அவதூறாக பேசியதாக குஷ்பு அளித்த புகாரின் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

திமுக-விலிருந்து நீக்கப்பட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனு விசாரணையை நாளை மறுநாளுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.


Next Story