தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை


தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை
x

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக உள்துறை செயலர், தமிழக டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கையாள்வது குறித்து, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story