செங்கல்பட்டு: லாரி மீது அரசு பஸ் மோதி பயங்கர விபத்து - 5 பேர் பலி


செங்கல்பட்டு: லாரி மீது அரசு பஸ் மோதி பயங்கர விபத்து - 5 பேர் பலி
x

செங்கல்பட்டு அருகே லாரி மீது அரசு பஸ் மோதி விபத்தில் பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் ஒரு பகுதி முழுவதுமாக சேதம் அடைந்து.

பஸ்சில இருந்த பயணிகள் காப்பாற்றி கோரி சத்தம் போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த விபத்தல் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story