சென்னை - செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம்


சென்னை - செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம்
x

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை - செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக சென்னை - செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

பொதிகை விரைவு ரெயில்: வரும் 15ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் ரெயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

வரும் 16, 17 தேதிகளில் சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து செங்கோட்டைக்கு கிளம்பும். வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயில், செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்

சிலம்பு விரைவு ரெயில்: வரும் 16ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் ரெயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும். வரும் 17ம் தேதி முழுமையாக ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

வரும் 15ம் தேதி செங்கோட்டையில் இருந்து கிளம்பும் ரெயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும். வரும் 17ம் தேதி ரெயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை - கொல்லம் விரைவு ரெயில்: வரும் 15, 16 மற்றும் 17 தேதிகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும்.

கொல்லம்-சென்னை விரைவு ரெயில்: வரும் 17ம் தேதி கொல்லத்தில் இருந்து புறப்படும் ரெயில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக சென்னை எழும்பூர் செல்லும். தாம்பரம் செல்லாது.


Next Story