பெங்களூரு-மதுரை வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம்


பெங்களூரு-மதுரை வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம்
x

பெங்களூரு-மதுரை வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பெங்களூரு கன்டோன்மென்ட்-மதுரை இடையே கடந்த 31-ந்தேதி வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் முதல் அந்த ரெயில் முறையாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு-மதுரை வந்தேபாரத் ரெயில் சேவையில் சிறிய மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை-பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தேபாரத் ரெயில் (வண்டி எண்: 20671) கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.50 மணிக்கு வந்து மதியம் 12.52 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை (வியாழக்கிழமை) முதல் மதியம் 12.30 மணிக்கு வந்து மதியம் 12.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

மறுமார்க்கமாக பெங்களூரு கன்டோன்மென்ட்-மதுரை வந்தேபாரத் ரெயில் (20672) கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 1.55 மணிக்கு வந்து மதியம் 1.57 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக வருகிற 15-ந்தேதி முதல் மதியம் 1.43 மணிக்கு வந்து 1.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story