'சந்திரயான்-3 வெற்றி: பழமைவாத மூடநம்பிக்கைகளை தகர்த்துள்ளது' - திருமாவளவன்


சந்திரயான்-3 வெற்றி: பழமைவாத மூடநம்பிக்கைகளை தகர்த்துள்ளது - திருமாவளவன்
x

உலக அரங்கில் நம் தேசத்தின் மதிப்பு வல்லரசுகளே வியந்து பார்க்கும் வகையில் உயர்ந்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் இன்று மாலை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவில் இதுவரை எந்த நாட்டின் விண்கலமும் தரையிறங்காத பகுதியில் இந்திய விண்கலம் தரையிறங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், அறிவியலாளர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"இன்று மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 ஆய்வுக் கலன் வெற்றிகரமாகத் தரை இறங்கியுள்ளது. இதனால் நம் தேசத்தின் மதிப்பு வல்லரசுகளே வியந்து பார்க்கும் வகையில் உலக அரங்கில் வெகுவாக உயர்ந்துள்ளது.

பழமைவாத மூடநம்பிக்கைகளைத் தகர்த்து, இன்றைய நமது அறிவியல்-தொழில்நுட்பத் திறன் மனிதகுலத்தின் நாகரிக வளர்ச்சியை மென்மேலும் செழுமையடைய வைத்துள்ளது என்பதை உணர்த்துகிறது. இது மகத்தான வரலாற்றுச் சாதனை. இச்சாதனையைப் படைத்துள்ள நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.


இன்று மாலை 6.04 மணியளவில் நிலவில் #சந்திராயன்3 நிலவின் தென் துருவத்தில் இந்த ஆய்வுக் கலன் வெற்றிகரமாகத் தரை இறங்கியுள்ளது. இதனால்
நம் தேசத்தின் மதிப்பு வல்லரசுகளே வியந்து பார்க்கும் வகையில் உலக அரங்கில் வெகுவாக உயர்ந்துள்ளது.
பழமைவாத மூடநம்பிக்கைகளைத் தகர்த்து, இன்றைய நமது… pic.twitter.com/Ar9dmmvj41

— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 23, 2023 ">Also Read:



Next Story