தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

தென்காசி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய 30 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story