காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 July 2023 6:45 PM GMT (Updated: 15 July 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட தி.மு.க. அணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, சி.எஸ்.ராஜா, மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி முன்பு இளைஞர்கள் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் காமராஜர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி பின்னர் 50 பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. இதில் அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் நகராட்சி தலைவர் ஹென்றி, வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சரவணபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன், தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, ஐசன்சில்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவனர் தலைவர் என்.ஆர்.தனபாலன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் சிவகுமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வக்கீல் சகாயராஜ், தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்டத் தலைவர் ரவி சேகர், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் மில்லை தேவராஜ், அவைத்தலைவர் இருதய குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story