2-வது திருமணம் செய்த கடலூர் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு


2-வது திருமணம் செய்த கடலூர் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கடலூர் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெரம்பலூர்

கடலூர் மாவட்டம் மேலக்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர் கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகா (25) என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த விக்னேஷின் பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய விக்னேஷுக்கு அவரது பெற்றோர் பெரம்பலூரை சேர்ந்த இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்திகா மங்களமேடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விக்னேஷ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story