மனைவி, மகள்கள் பிரிந்து சென்றதால் தச்சுத்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி, மகள்கள் பிரிந்து சென்றதால் தச்சுத்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Jan 2023 6:45 PM GMT (Updated: 21 Jan 2023 6:46 PM GMT)

மனைவி, மகள்கள் பிரிந்து சென்றதால் தச்சுத்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே உள்ள வெண்டலிகோடு பாம்பு தூக்கி விளையை சேர்ந்தவர் ரதீஷ் (வயது 50). தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி உஷா (41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ரதீசுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், அவர் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 3½ வருடங்களுக்கு முன்பு உஷா கணவரை விட்டு பிரிந்தார். அவர் மணலிக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் சமையல் வேலை செய்து வந்தார். இதற்காக அப்பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, மகள்களையும் படிக்க வைத்து வருகிறார்.

தன்னைவிட்டு மனைவி, மகள்களுடன் பிரிந்து சென்றதால் ரதீஷ் மனவேதனை அடைந்தார். அதைத்தொடர்ந்து அவர் மேலும் மதுகுடித்து வந்தார். இந்த நிலையில் ரதீஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி உஷா குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story