கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் கல்லூரி மேற்பார்வையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது பாலவாக்கம் கிராமம். இங்கு தனியார் கல்லூரி ஒன்றின் மேற்பார்வையாளரான ராகவன் (வயது 61), என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி மேகனாவுடன் ஆரணியில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கு தனியறையில் இருந்த பீரோவையும் உடைத்து அதிலிருந்த 17 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story