சேலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மலரும் பிரம்ம கமலம் பூக்கள் பூத்தன


சேலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மலரும் பிரம்ம கமலம் பூக்கள் பூத்தன
x

சேலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மலரும் பிரம்ம கமலம் பூக்கள் பூத்தன.

சேலம்

கருப்பூர்:

சேலம் அழகாபுரம் சிவாய நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் தனது வீட்டில் இரவில் மட்டும் பூக்கிற பிரம்ம கமல செடி வளர்த்து வருகிறார். இந்த செடியில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் கமல பூ நேற்று இரவு பூத்தது. ஒரே செடியில் 10-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்தன. இதனை அந்த பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து கண்டு வணங்கினர். பின்னர் பூவுக்கு தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனர். இந்த பூக்களை பார்க்க அந்த பகுதி மக்கள் இரவானாலும் ஏராளமானவர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story