திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை


திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை
x

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.

திருச்சி

இந்திய நாட்டின் 77-வது சுதந்திரதினவிழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் தோறும் மூவர்ணக் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்தநிலையில் சுதந்திரதின கொண்டாட்டம் அமைதியாக நடக்கும் வகையில் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். ஜங்ஷன் வழியாக சென்ற ரெயில்களில் ஏறி சோதித்ததோடு, பயணிகளின் உடமைகளும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டன. ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடமைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டது. மேலும், ரெயில் நிலைய நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினர்.


Next Story