பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி


பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி
x

சேலம் சமூக ஆர்வலர் அளித்த புகாரின் பெயரில் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில், அண்ணாமலை தமிழக மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரு சமூகத்திற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அரசின் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் அளித்த புகாரின் பேரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார். இதன் நகல் தற்போது சேலம் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பாக விரைவில் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story