பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீச்சு


பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 1 Aug 2023 6:45 PM GMT (Updated: 1 Aug 2023 6:46 PM GMT)

ஊத்துமலை அருகே பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது.

தென்காசி

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள நொச்சிகுளத்தை சேர்ந்தவர் செந்தட்டி காளை (வயது 45). இவர் அப்பகுதியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். தென்காசி மாவட்ட பா.ஜ.க. கலை இலக்கிய பிரிவு செயலாளராகவும் உள்ளார். சம்பவத்தன்று இவரது வீட்டில் மர்மநபர்கள் சிலர் மண்எண்ணெய் குண்டை வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து அவர் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story