பால சாகித்ய புரஸ்கார், யுவபுரஸ்கார் விருதுகளுக்கு எழுத்தாளர்கள் ஜி.மீனாட்சி, காளிமுத்து தேர்வு


பால சாகித்ய புரஸ்கார், யுவபுரஸ்கார் விருதுகளுக்கு எழுத்தாளர்கள் ஜி.மீனாட்சி, காளிமுத்து தேர்வு
x

2022-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் ,யுவபுரஸ்கார்,விருதுகள் அறிவிக்கப்பட்டன

சென்னை,

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு செப்பு பட்டயத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படும்.

இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் ,யுவபுரஸ்கார்,விருதுகள் அறிவிக்கப்பட்டன.தமிழ் மொழிக்கான 2022ம் ஆண்டு சாகித்ய அகாடமி பால சாகித்யா புரஸ்கார் விருது 'மல்லிகாவின் வீடு' என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார விருது, 'தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' என்ற கவிதை தொகுப்புக்காக,எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 14 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் ,விருதும் வழங்கப்படும்


Next Story