அம்பை வாகைபதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்


அம்பை வாகைபதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
x

அம்பை வாகைபதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைபதியில் ஆவணி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அய்யா வைகுண்டர் ஸ்ரீமன் நாராயணசாமிக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் அனுமன், கருடன், நாகம், சூரியன், பூப்பல்லக்கு, அன்னம், இந்திரன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிப்பார். 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு முழு நேரம் நடைதிறப்பு மற்றும் தினமும் மதியம் உச்சி படிப்பு, அன்னப்பால் கஞ்சி தர்மமும், இரவு 7 மணிக்கு மேல் அன்னதர்மமும் நடைபெறுகிறது.

8-ம் திருநாள் அன்று அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10-ம் திருநாளன்று முந்திரிக் கிணற்றில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தனக்குடம், பால்குடம் எடுத்து வருதல் மற்றும் சிறப்பு பணிவிடைகள் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக 11-ந் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்புக்கொடி மக்களும், வாகைபதி தொண்டர்களும், அய்யா வழி பக்தர்களும் செய்து வருகின்றனர். அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா பவனியாக வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.


Next Story