அண்ணாமலை உருவப்பொம்மையை எரிக்க முயற்சி


அண்ணாமலை உருவப்பொம்மையை எரிக்க முயற்சி
x

அண்ணாமலை உருவப்பொம்மையை எரிக்க முயற்சி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

காரியாபட்டி,

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அமலாக்கத்துறையை கண்டித்தும் காரியாபட்டி ம.தி.மு.க. பிரமுகர் மிசா.சாமிக்கண்ணு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உருவப்பொம்மையை பஸ் நிலையம் முன்பு எரிக்க முயன்றார். அப்போது காரியாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அவரை தடுத்தனர். இதையடுத்து உருவப்பொம்மையை எரிக்க முயற்சி செய்தமிசா. சாமிக்கண்ணுவை கைது செய்தனர்.


Next Story