கிருஷ்ணகிரியில்சரக அளவிலான தடகள போட்டிகள்856 மாணவ, மாணவிகள் பங்கேற்பு


கிருஷ்ணகிரியில்சரக அளவிலான தடகள போட்டிகள்856 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சரக அளவிலான தடகள போட்டிகள் நடந்தன. இதில் 856 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தடகள போட்டிகள்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், இம்மிடிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், வேப்பனப்பள்ளி சரக அளவிலான தடகள போட்டிகள் நேற்று நடந்தது. 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட 3 பிரிவுகளில், போட்டிகள் நடந்தது. இதில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 856 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு 100, 200, 400, 800, 1500, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், தொடர் ஓட்ட போட்டிகள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாவட்ட அளவிலான...

இந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, பெற்றோர் சங்கத் தலைவர் ராமமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் முருகன், கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், முதல் 2 இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.


Next Story