கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


கொடுமுடி போலீஸ் நிலையத்தில்  பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x

கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 25). அதே பகுதியை சேர்ந்த ஜஜினா பீபி (23). 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் அவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story