சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடருக்கு 20 ஆண்டு சிறை


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடருக்கு 20 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும். 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கலங்காபேரி சாலையைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 63). இவர் அப்பகுதியில் ஜோதிடராக இருந்து வந்தார். இவர் கடந்த 5.9.2020-ல் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஜோதிடருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும். 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story