மாணவர்களுக்கு பாராட்டு விழா


மாணவர்களுக்கு பாராட்டு விழா
x

சிலம்பம், கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா- எஸ்.பி.சண்முகநாதன் பங்கேற்பு

தூத்துக்குடி

ஏரல்:

சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் நாசரேத் ஆலன் திலக் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம், சான்றிதழ்கள் மற்றும் சாம்பியன் கோப்பையும் பெற்றனர்.

இவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பாராட்டு தெரிவித்தார். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் டென்னிசனையும் வாழ்த்தினார்.


Next Story