அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு


அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:46 PM GMT)

கீழே கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவரை போலீசார் பாராட்டினர்.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் அன்பழகன். இவர் கல்குறிச்சி அரசு பள்ளியில் படித்து வருகிறார். அன்பழகன் நேற்று வழக்கம் போல பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது வழியில் 400 ரூபாய் சுருட்டிய நிலையில் கீழே கிடந்தது. அங்கு யாரும் இல்லாத நிலையில் பணத்தை யாரிடம் கொடுப்பது என தெரியாமல் அருகில் இருந்த மானாமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு பள்ளிக்கு சென்றார்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், ராஜேஸ் மற்றும் போலீசார் பள்ளிக்கு நேரடியாக சென்று அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவரின் நேர்மையை பாராட்டியதுடன், திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்கள்.


Next Story