இளநிலை உதவியாளர் பணிக்கு 3,400 பேர் விண்ணப்பம்


இளநிலை உதவியாளர் பணிக்கு 3,400 பேர் விண்ணப்பம்
x

நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் இளநிலை உதவியாளர் பணிக்கு 3,400 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்

நாமக்கல்

நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஒரு இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு மட்டும் சுமார் 3,400 பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் நடந்து வருகிறது. நேற்று கோவில் அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. இதில் காலை முதல் மாலை வரை 200 பேரிடம் நேர்காணல் செய்யப்பட்டது.


Next Story