போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

சீர்காழியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளியில் உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரூபி சாந்தகுமாரி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பிலிப் ராஜராஜன், என்.சி.சி. அலுவலர் கிருபாகரன், என்.எஸ். எஸ். அலுவலர் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜே.ஆர்.சி. அலுவலர் ராபர்ட் ரத்தினராஜ் வரவேற்று பேசினார். ஊர்வலத்தை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தொடங்கி வைத்து பேசினார். பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி, பிடாரி தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம், கச்சேரி ரோடு, புதிய பஸ் நிலையம் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி சென்றனர். இந்த ஊர்வலத்தில் போலீசார், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story